தமிழில் புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை முழுவதையும் பேசுகிற பல நூல்கள் வந்திருக்கின்றன. சில நூல்கள் தனித்தனியாக அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், அவரின் அரசியல் போக்குகள், அவரின் தனித்தன்மைகள் போன்றவற்றை ஆய்வு செய்திருக்கின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு கோணங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்கள் குறித்தும் ஒரு மாபெரும் மக்கள் திரளின் வாழ்வுப் போக்கை மாற்றிய அரசியல் குறித்தும் உலக அளவில் பல நூல்கள் வந்திருக்கின்றன. ஜெயச்சந்திரன் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் முழுமையான வாழ்வை இந்த நூலில் நமக்குத் தருகிறார். தற்காலத் தமிழில் தெளிந்த நடையில் மிக இலகுவாக வாசகர்கள், குறிப்பாக இளம் வாசகர்கள் அம்பேத்கரை முழுமையாக அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த நூல் உருவாகி இருக்கிறது.
-யாழன் ஆதி
Be the first to rate this book.