தமிழரின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக்கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுகிறது. அது எக்காலத்திலும் நம் இளவரையறைக்குள் கழன்றுகொண்டே வருகிறது. ஆதிதொட்டு சமீபத்திய புரட்சி வரை காலம் அதன் முக்கியத்துவத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கையில், அது சார்ந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட நபர்களை வெறும் வீரம், பெருமை போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட கதை இது. அதனாலோ என்னவோ இக்கதை, வாடியின் களத்தினுள் பெரும்பாலும் பயணிக்காது அதைச்சுற்றி கழலும் மனிதர்களின் எண்ணங்களில் தன்னை வடித்துக் கொண்டது. களத்திற்குமுன் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கைமுறை பின்னப்பட்டிருப்பதை அறிகையில் ஜல்லிக்கட்டுக் களத்தைப் பற்றிய பார்வை நமக்கு விரிவுபடும். அது வெளிக்கொணரும் உண்மைகளை முக்கியமானவையாக கருதுகிறேன். இங்கு எதைப் புனிதமாக்கவேண்டும் என்கிற வரையறை ஒருவர் கையில் இருக்கும்வரை நாம் எதிர்கதையாடல்களை முன்வைத்தே தீரவேண்டும்.
Be the first to rate this book.