நடப்பனவும் பறப்பனவும் பிறவும் தத்தம் நல்லறிவுக் கேற்றபடி ஆணும் பெண்ணும் தடுப்பனவில் லாதுபிறப் புரிமை யெல்லாம் தாமடைந்தன் போடுசரி நிகராய் வாழப் படைப்பதனில் உயர்படைப்பென் றுயர்த்துப் பேசிப் பகுத்தறிவ துடையமக்கட் பதர்கள் மட்டும் பிடித்தமுயற் கிரண்டேகொம் பெனப்பெண் மக்கள் பிறப்புரிமை யில்லையென மறுப்ப தேனோ!
அஞ்சினிலே பாழ்ந்தாலி யறுத்தே பாவம் அகத்தினில்முண் டெழுங்காமக் கனலால் தீந்து மஞ்சளொடு கலவைமண மலர்பட் டாடை மணிக்கலன்க ளிழந்துலகப் பழிக்க ளாகிப் பிஞ்சினிலே வாடியபூம் பிஞ்சு போலப் பெண்பிறப்பின் பயனிழந்து பிழைக்கு மோரை நெஞ்சினிலே நினையாத மாந்தர் தம்மை நினைத்தாலும் நடுங்குதுமென் நெஞ்சந் தானே!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.