இந்தியி னாலெங்கள் செந்தமிழ் கேடுறும் என்று தமிழர்கள் சொன்னார் - அதை ஏற்காமல் ஆளவந் தாரிந்தி கட்டாயம் என்றிறு மாப்பொடு சொன்னார்.
வீரத் தமிழர்கள் கூடிச் சென்னையிலே வேண்டாம் இந்தியெனக் கேட்டார் - ஆள்வோர் வீம்புபே சிச்செய்வ தைச்செய்யுங் களென்று வீரப்போர்க் குவிதை போட்டார்.
எங்கள் பெரியாரை ஓமந்தூ ராரழைத் தேமாற்ற லாமெனப் பார்த்தார் -ஆ! எங்கள் பெரியாரா ஏமாறு கின்றவர் இந்தி யெதிர்ப்பென ஆர்த்தார்.
ஆரிய இந்தி யதையொழிப் பேனென ஆண்மை யொடுவெளிப் பட்டார் - எங்கள் அறிஞர் அண்ணாவைப் படைத்தலை வராக ஆக்கியே போர்தொடுத் திட்டார்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.