அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் தொகுப்பு இது.
இனத்தின் காரணமாகவும், நிறத்தின் காரணமாகவும் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட மக்களில் முதன்மையானவர்கள், அங்கே அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு, மனிதர்களாக வாழமுடியாமல் போன கறுப்பினத்தவர்கள். அவர்களும் தங்களது நிலையைக் குறித்த அரசியல், இலக்கிய விழிப்புணர்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெற்றார்கள். 'ஹார்லெம் மறுமலர்ச்சி' என்று அழைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் கறுப்பினத்தவர்கள் கலை, இலக்கியம், இசை என அனைத்து துறைகளிலும் புதுரத்தத்தை பாய்ச்சினார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to rate this book.