தம்முடைய உருவத்தை நேசிக்காதவர் எவரும் இல்லை. ஆதி மனிதன் தன் உருவத்தைத் தண்ணீரிலே பார்த்தான், சிலரது முகங்களை குகை ஓவியத்தில் வரைந்தான். ஆனால் துல்லியமான காட்சிகளைப் புகைப்படங்களின் மூலமே நிரந்தரமாகப் பதிந்துகொள்ள இயன்றது.
சில முக்கியமான தருணங்களை ஆவணப்படுத்தி, தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பை அளிப்பது புகைப்படக்கலை.
அப்படிப்பட்ட புகைப்படக்கலை தோன்றிய வரலாறு, வளர்ந்த விதம், பணி வாய்ப்புகள், வருவாய் ஈட்டக் கூடிய சாத்தியங்கள். அதற்கான படிப்புகள் போன்றன ஆரம்ப கட்டத்தில் இருப்போர்க்கும் பயனளிக்கும் வகையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
வன உயிரினங்கள், கட்டடங்கள், நிகழ்ச்சிகள், வரலாறு மற்றும் சரித்திரச் சான்றுகள் போன்ற ஒவ்வொரு பிரிவையும் புகைப்படமாக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள் போன்றன இந்த நூலில் எனிமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் செய்நேர்த்தி கூடிய கலை நயம் மிக்க புகைப்படங்களை எடுக்க விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
படியுங்கள்! படம் பிடியுங்கள்! பலன்பெறுங்கள்!!!
Be the first to rate this book.