இந்த நாவல் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவாகும்.
பொறுமை… பொறுமை… ‘முன்யால்’ — அதுவே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் முதன்மை நெறி என்று சொல்லிக் கற்றுக்கொடுக்கப்படும் சமூகத்தில் மூன்று பெண்களின் கதைகள் இந்நாவலில் ஒன்றாக இணைகின்றன.
குடும்ப மரபு, கட்டாயத் திருமணம், பலதார மணத்தின் காயம், ஆண் அதிகாரத்தின் முன் மௌனமாக நிற்க வேண்டிய நிலை என ரம்லா, ஹிந்தூ, ஸஃபிரா— இவர்களின் வாழ்க்கை ஒரே நெசவாக பின்னப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணின் கனவுகள் எப்படி மற்றவர்களின் முடிவுகளால் தகர்க்கப்படுகின்றன? “பொறுமை” என்ற சொல் எப்போது ஒரு பண்பாக இருந்து அடக்குமுறையாக மாறுகிறது? அன்பு, பொறாமை, வலி, எதிர்ப்பு — இவற்றின் இடையே அவர்கள் தங்களின் குரலை எவ்வாறு தேடுகின்றனர்?
கேமரூன் எழுத்தாளர் ஜைலி அமாதூ அமால் அவர்களால் எழுதப்பட்ட இந்த நாவல், 2021ஆம் ஆண்டு Prix Goncourt des Lycéens என்ற விருதைப் பெற்றது. பெண்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள சமூக அமைப்புகளை நேராக எதிர்கொள்ளும் ஒரு சக்திவாய்ந்த குரலாக இந்நாவல் ஒலிக்கிறது.
Be the first to rate this book.