உலகின் எந்த மூலையில் எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், அங்கே முதலில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். கல்வி, மகிழ்ச்சி, பாதுகாப்பு, வளரும் வயதுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், தூக்கம் என குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும், நிராசையாக்கிவிடும் வல்லமை போருக்கு உண்டு. அதிலும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்குமான போர் ஒரு நூற்றாண்டைத் தாண்டித் தொடர்கிறது.
சமீர் ஜுந்தி எழுதிய 'போரும் சிறுவனும்' என்ற இந்த நாவலில் வரும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு 12 வயதுச் சிறுவன், தன் மொத்த குழந்தைப் பருவத்தையும் தொலைத்துவிட்டு, வீதிகளில் உணவும் தண்ணிரும் தேடி அலைகிறான். வருங்காலத்தைக் கனவு காண வேண்டிய வயதில், எரிந்து போன நிகழ்காலத்தின் கனத்தை சுமந்து கொண்டிருக்கிறான் அவன். நாவலின் ஆசிரியர் சமீர் ஜுந்தி அவனுக்குப் பெயர் என ஒன்றைச் சூட்டவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் தலைவிதியே ஒன்றுதான் எனும்போது, பெயர் சூட்டினாலும், சூட்டாவிட்டாலும் பெரிய வித்யாசம் இல்லை அல்லவா? அவன் கதைதான் அனைவரது கதையும்.
Be the first to rate this book.