பொதுவாக இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்குபவைதான் தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய தத்துவங்களில் மிக முக்கியமானவை பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும். உலகில் பொருள்தான் முதலில் உருவானது என்கிறது பொருள்முதல்வாதம். அப்படியில்லை, கருத்துதான் முதலில் பிறந்தது என்கிறது கருத்துமுதல்வாதம். ஏடறிந்த காலம் முதல் இன்றுவரை இவை இரண்டுக்குமான கருத்து மோதல்கள் நீடிக்கின்றன. அறிவியல் உண்மைகளை தனது தத்துவ வழிகாட்டியாகக் கொள்கிறது பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதத்திற்கு அப்படியெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. எனவே, தான் மார்க்சிய மூலவர்களான காரல் மார்க்சும் பிரெடெரிக் ஏங்கெல்சும் இயற்கை மற்றும் சமூகம் இரண்டையும் அறிவியல் நோக்கில் உலகுக்கு விளக்கிச் சொன்னார்கள். பொருள்முதல்வாதம் என்றால் என்ன? என்று பாமரனும் அறியும் வண்ணம் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.