அ.கா.ஈஸ்வரன் - கல்லூரிப் படிப்பு தமிழ் இலக்கியத்தில் தொடங்கினாலும், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இலக்கியம் ஒதுக்கப்படவில்லை ஆனால் கவனம் குறைந்து போனது. சமூகவியல் ஆர்வம் மார்க்சிய தத்துவப் பக்கம் கொண்டு சென்றது. அது முதல் இலக்கியம் படிப்பதற்கான நேரம் குறைந்தது. அந்த நேரத்தைத் தத்துவப் படிப்பு எடுத்துக் கொண்டது. சைவ சித்தாந்தம், பௌத்தம் ஆகிய தத்துவத்தில் இருந்து, அத்வைதம், சமணம், ஆசீவகம், மார்க்சியம், சாங்கியம் என இவரது தத்துவப் படிப்பு விரிவானது. அனைத்தையும் மூல நூல்களில் படித்து அறியவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். இந்தியத் தத்துவங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும். அதை நூலாக எழுத வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகின்றார். அதன்படி இந்தியத் தத்துவங்கள் முதல் தொகுதி வெளிவந்தது. மற்ற தொகுதிகள் தொடர்ந்து வர இருக்கின்றன. இந்தத் தத்துவம் எழுதும் வெளிப்பாட்டின் மற்றொரு வடிவமே "பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதி சங்கரரின் அத்வைதம்" என்கிற இந்த நூல்.
Be the first to rate this book.