இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளம். அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஒரு நேர்மையான எழுத்தாளன் தனது புனைவுகளிலும் பொய் உரைப்பதில்லை. தனக்கு நிகழாத, தன்னைத் தொட்டுக் கடக்காத ஒன்றனைக் குறித்து எழுதுவதில்லை. இத்தொகுப்பில் உள்ள குறுங்கட்டுரைகள் தன்னைத் தொட்டுக் கடந்தவற்றின் தொகுப்பன்றி இன்னொன்றில்லை என்கிறார் பாரா.
Be the first to rate this book.