திருச்சி மாவட்ட லால்குடியில் 1960இல் பிறந்தவர் ஸ்ரீதரன் எனும் கானப்ரியன். மத்திய அரசு நிறுவனமான தொலைக்காட்சி நிலையத்தில் தொழில் நுட்ப உதவியாளராக சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற இடங்களில் 37 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். மொழியின் மேல் இருந்த ஆர்வத்தினாலும் இயல்பான படைப்புத் திறனாலும் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுதிய கவிதைகளை ஒன்பது தொகுதிகளாக பல்வேறு பதிப்பகங்களில் வெளியிட்டுள்ளார்.
மெல்லிசைப் பாடகரான இவர் இலக்கிய உலகத்துள் கால் பதிக்கும் போது, இசையின் மேல் இருக்கும் தணியாத காதலால், தன் புனைப்பெயரை கானப்ரியன் என்று சூட்டிக் கொண்டார். பணி நிறைவு பெற்ற பின்னர் வரலாற்றுப் புனைவுகள் எழுத நினைத்து 2022 முதல் இதுவரை சோழச் சுடர் குலோத்துங்கன், வைகைப் புதல்வன், பல்லவராயன், காடவச் சிங்கம், கன்னர தேவன் என ஆறு சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார்.
இவரது உரைநடையின் பாணியும், வீச்சும் அலாதியானவை. வெகு அரிதான சிலரிடம் கிடைப்பவை. இதற்கான காரணம் இவருடைய பிரத்யேகமான சொல் தேர்வுகளும், பிரமிப்பான உவமைகளும், உரைநடையில் இவர் தன் குருவாக திரு.லா.ச.ராமாமிர்தம் அவர்களை மனதில் வரித்தவர்.
Be the first to rate this book.