மரியா பிறந்தபொழுது சேக்ஸ்பியர் மறைந்து 30 வருடங்களும், சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது என கலீலியோ அறிவித்து 13 வருடங்களும் ஆகியிருந்தது. விஞ்ஞானமும், பைபிளும் நேரடியாக மோதிக் கொண்டிருந்த காலகட்டம். 18, 19ஆம் நூற்றாண்டின் இயற்கையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பெரும்பாலும் நல்ல வளமிக்கவர்களாகவும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களாகவும் சாகசப் பயணத்திற்காக கடற்பயணம் மேற்கொண்டும் வந்தனர். டார்வினின் புகழ் பெற்ற (1831) பீகிள் பயணம், ஹும்போல்டின் (Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt, 1769–1859) (1799) இலத்தீன் அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக ஐரோப்பாவிலிருந்து புது உலகை நோக்கி அறிவியல் கண்டுபிடிப்பிற்காக, குறிப்பாக பூச்சிகளைப் பற்றிய ஆய்விற்காக கடற் பயணத்தை (1699) மேற்கொண்ட முதல் பெண்மணி மரியா சிபெல்லா மேரியான் (MARIA SIBYLLA MERIAN) தான். 'சாதாரண கல்வி அறிவுடைய 52 வயது பெண்மணி ஒருவர் பூச்சிகள் பற்றிய ஆய்விற்காக 300 வருடத்திற்கு முன் தென் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார் எனில், எந்த நம்பிக்கையில் அவர் கப்பல் ஏறியிருப்பார்?’ வியப்பாக இருக்கிறது.
Be the first to rate this book.