நீண்டகால பரிணாம வளர்ச்சியில் தாக்குப்பிடித்து தொடர்ந்து தக்கவைத்து வாழ்வதால், 'சிறப்பு மனிதன்' (Super Man) என்ற சிறப்புப் பெயரும் பூச்சிகளுக்கு உண்டு. பிரிவு, உட்பிரிவு, துணை வரிசை, குடும்பம், துணைக் குடும்பம், பழமை, இனம், வகை என வகைப்பாட்டின் தன்மைக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ள பூச்சிகள் 34 வரிசையில் அடங்குகின்றன. விலங்குகளின் உலகில் பூச்சிகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
இதுவரை சுமார் 1.5 மில்லியன் பூச்சிகள் உலகளவில் கண்டறியப்பட்டுள்ளன. உலகளவில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பூச்சிகளின் தொல்லெச்சங்கள் (fossils) கிடைத்துள்ளன. மகரந்தச் சேர்க்கை முதல் துப்புரவாளர் எனப் பல வடிவங்களில் சூழல் சமன்நிலைக்கு பூச்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. உலகில் கண்டறியப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை பூச்சிகளாக உள்ளன. இவை சுமார் 6 முதல் 10 மில்லியனாக இருக்கலாம் என பூச்சியியலாளர்கள் கருதுகின்றனர்.
உயிரின உலகில் பூச்சிகள்-பறவைகள்-பாலூட்டிகள்-தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் (சூழலியல்) சமத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அதனை மனிதனால் செய்ய இயலாது. இயற்கையே ஒரு உயிரினத்தின் வாழ்விடத்தைக் கட்டுப்படுத்தும்.
‘பூச்சிகளற்ற உலகத்திலும், பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதச் சமூகத்தால் வாழ இயலாது’
Be the first to rate this book.