பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விஜயாலய சோழன் ஆவான். இவன் எவ்வாறு பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டான் என்பது பற்றிய வரலாற்று நாவலே பொன்னி வேந்தன். பல்லவர்களுக்கு உறுதுணையாக அவர்களின் நாட்டு எல்லையை விரிவாக்கப் பல்வேறு போர்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறான் விஜயாலயன். அவன் செய்த உதவிகளுக்குப் பதிலுதவியாக அவன் சுதந்திரமாக ஆட்சி செய்ய சிறு பகுதியைக் கொடுப்பதாக நரசிம்ம வர்ம பல்லவர், விஜயாலயனுக்கு வாக்களிக்கிறார். ஆனால் அவன் ஆட்சியைப் பெற முடியாதபடி நரசிம்மரின் மனைவியும் பாண்டி நாட்டவளுமான மாறன்பாவை சதிவலை பின்னுகிறாள். அதில் நரசிம்மவர்மரும் மாட்டிக்கொள்கிறார். இக்கதையின் ஊடாகப் பாண்டி நாட்டு இளவரசியான மாதவி என்னும் அனகாவதி, விஜயாலயன் இவர்களின் காதலும் இணைந்து வருகிறது.
Be the first to rate this book.