பிளேட்டோவின் நூல்கள், தத்துவ சாஸ்திரிகள் கையிலே மட்டுமல்ல, அறிஞர்கள் கையிலே மட்டுமல்ல, எல்லோர்கையிலும் இருக்க வேண்டும்; பிளேட்டோவை அறிவு வளர்ச்சிக்காக மட்டும் படிக்க வேண்டுமென்பதில்லை; அதைப்படித்தால் இன்பகரமாகப் பொழுது போகிறது, சந்தோஷம் உண்டாகிறது என்பதற்காகவாவது படிக்க வேண்டும்; பத்திரிகைகளில் எழுதுகிறவர்களும், மேடைகளில் பேசுகிறவர்களும், பிளேட்டோவைத் தெரிந்துகொண்டு எழுதவும் பேசவும் முற்படுவார்களானால், எவ்வளவோ நன்றாயிருக்கும்: ஜனங்கள் அறிவு விளக்கம் பெறுவார்கள்; அரசாங்கத்தின் வேவை சுலபமாக நடைபெறும்; அரசியல்வாதிகளுட்பட ஜனங்கள் அனைவரும் சந்தோஷமாயிருப்பார்கள்,
Be the first to rate this book.