அலைவுறும் வாழ்க்கை’ என்பது மனித வாழ்க்கையின் நியதியாகி விட்ட சூழலில், சென் தத்துவம் உடலியல்,மன அலைவுறுதலைத் தடுத்து இளைப்பாறுதலோடு வாழ்வதற்கான வழி முறைகளைக் கூறுகிறது. தற்காலத்தில், மனித சமூகம் இயற்கை, உறவுகள் என எல்லாவற்றையும் பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில், இடைக்கால ஜப்பானில் வாழ்ந்த சென் ரியோகனின் கவிதைகள் நிலையாமையைக் கூறி உலக வாழ்க்கைக்கான அலைவுறுதலை மட்டுமல்லாமல் ஞானத்திற்கான தேடலிலும் அலைவுறுதலும் தேவையற்றது; உள்ளொளிப் பயணமே ஞானத்தின் திறவுகோல் என்பதை முன் வைக்கிறது.
Be the first to rate this book.