ஆட்சி அதிகாரங்களை நடுங்க வைக்கும் சொற்களை மனிதன் தனக்குள் வைத்திருக்கிறான். ஆதிக்கவர்க்க கடுங் கூற்றுகள் அவனை நிலைகுலையச் செய்யும்போது தனது சுயத்தை மறந்து பூமிக்குள் புதைந்தும் போகிறான் அவனது நிறைவேறாத வாக்குறுதிகள் காற்றில் அலைகின்றன கதைகள் அவற்றை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றன.
காரிய பராக்கிரமங்களால் பலவீனமான இனங்களை அடக்கியாளும் அரியாசனத்தின் முன்பாக வளைய மறுக்கும் மனிதனின் மணிக்கட்டு நரம்புகளில் இருந்து புரட்சி பூக்கிறது.
வர்ணங்களை புறக்கணிக்கும் ஒருவன் புனையப்பட்ட கடவுள்களை நோக்கி அந்தக் கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறான்.
நீங்கள் யார்? எனில்
நாங்கள் யார்?
- பாலைவன லாந்தர்
Be the first to rate this book.