பெற்றோர் - பிள்ளை உறவுகள்:
மனித குலத்தின் எதிர்காலம் பிள்ளைகளே! பிள்ளைகளின் மூலம் நாம் உலகத்தை மாற்ற முடியும்!! நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏதுமற்ற குடும்ப சூழல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பும் பணிவும் நிறைந்த, இணக்கமான இறை பக்தியுடைய பிள்ளைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பத்தை பார்த்திட வேண்டுமா ? நல்ல பெற்றோர் என்றால் யார்? எப்படி நாம் தொடங்குவது? பிள்ளை வளர்த்தலின் தொடக்கம் என்ன ? பிள்ளைகளை வளர்ப்பதை ஆனந்தமாக செய்வது எப்படி ? பெற்றோர் என்ற வகையில் நீங்கள் எப்படி மாறுபட்டவராக இருக்க முடியும் ? பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார்கள் ? நமது பிள்ளைகள் அசாதாரணமானவர்களா? மொத்தத்தில் குடும்பம் என்றால் என்ன? அது என்ன நோக்கத்தை கொண்டுள்ளது? எப்படி செயல்படுகிறது? அதன் இலக்குகள் என்ன? அதனை வலுப்படுத்துவது எது ? தகர்ப்பது எது?
முஸ்லிம் உலகிலும் மேற்கத்திய உலகிலும் குழந்தை வளர்ப்பு எப்படி இருக்கிறது? என்பது போன்ற எண்ணற்ற வினாக்களுக்கு சர்வதேச அளவிலான நிபுணர்கள் ஆய்வுகளின் அடிப்படையிலான தங்கள் கருத்துக்களை பதிலாக நம் முன் விரிக்கின்றனர்!!
இந்தப் புத்தகம் முஸ்லிம் உலகத்திலும் மேற்கத்திய உலகத்திலும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இறை வெளிப்பாட்டின் ஞானம், இறைத்தூதரின் வழிகாட்டுதல் மற்றும் முஸ்லிம் பாரம்பரியம் ஆகியவற்றில் மனித இனம் அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றை எளிய நடையில் பேசுகிறது இந்நூல்!!
பிள்ளை வளர்ப்பு என்பது சவாலானதாக இருந்தாலும் அது மிகவும் அனுபவித்து செய்யக்கூடிய, நம்மில் பெரும்பாலோர் விரும்பியே இருக்காத மகிழ்ச்சியை, ஆனந்தத்தை தரக்கூடியதாகும். அந்த ஆனந்தத்தை நாம் அனுபவித்துத் தான் பார்ப்போமே!!
Be the first to rate this book.