'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல், நூற்பா 372) என்கிறார். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தொல்காப்பியர்! இப்பொழுதும் சமவுடைமை/சமவுரிமை தவறிய சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடுகள்தாம் கருப்பும் சிகப்பும்! இத்துடன் நீலத்தையும் இணைத்துக் கொள்ள நாம் பழக்குவோம்! எதுவுமே விவாதத்திற்குரியதுதான்! இவற்றையும் விவாதிப்போம்! எவருடைய எந்த ஒரு வரியையும், தனியே உருவி எடுத்துத் தனியாக அலசாதீர்கள். முழுமையையும் வாசிக்கப் பழகுங்கள். முன்னும் பின்னுமான அவற்றின் இயைபைக் கொண்டே காலத்தைக் கணக்கிலெடுத்தே, அவற்றின் பயன்பாட்டு நோக்கில், எதுவொன்றையும் ஆய்விற்கு உட்படுத்துங்கள். அதுவே, அறம் நிறைந்த புனிதச் செயற்பாடு! அதையே, நமக்கான வேதமாக்குவோம்! சமூகம் முன்னேற, நடை பழக்குவோம்! அறிவாய் விவாதிப்போம்! அன்பாய்ச் சுவாசிப்போம்!
Be the first to rate this book.