ஈரோடு கிழவன் இறுக்கி அடித்ததில்
ஈறோடு பெயர்ந்தன இதிகாசப் பல்லெல்லாம்!
பூமிக்கும் அதுவரை புலப்படாத விந்தை;
சாமிக்கும் அஞ்சாத சமூகத்தின் தந்தை;
ஆதிக்கக் கூட்டத்தின் அடிகளைத் தகர்த்தவர்!
சாதிகள் எதற்கென சமத்துவம் மொழிந்தவர்!
ஊருக்கு ஒன்றெனில் ஒடுங்கிட அறியார்;
ஆருக்கும் அஞ்சார்; அவர்தான் பெரியார்;
Be the first to rate this book.