கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு.வேணுகோபால் தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்துத் நிற்பவர். படைப்பெழுச்சியின் தீவிர செயல்பாட்டால் உலகத்தரமான பல சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருப்பவர். பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டவர். படைப்பிற்கு நிகரான பழந்தமிழ் ஆய்வுக்கட்டுரைகளைத் தந்திருப்பவர். வெள்ளிவீதியார், மதுரை இளநாகனார், இளங்கோவடிகள், சங்கப்பெண்கள், பரிமேலழகர், திருவள்ளுவர் முதலியோர் குறித்த புதிய பார்வையுடன் மிகச்சிறப்பான கட்டுரைகளை இந்த நூலில் தந்திருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்திற்கு சு வேணுகோபால் தந்திருக்கும் பயனுள்ள தமிழ்பணி இந்நூல்.
Be the first to rate this book.