கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பசுமை குன்றாது நிமிர்ந்து திற்கும் ஜவ்வாதுமலை பல்வேறு தனித்துவங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. சங்க காலம் தொடங்கி சமகாலம் வரை அதன் சிறப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் நவிரமலையைப் (தற்போதைய ஜவ்வாதுமலை) பாணர்களின் வழி விரிவாக பதிவு செய்துள்ளது. அந்த நவிரமலையின் தொன்மையை அதன் தொடர்ச்சியை 'பழங்குடி வாய்மொழி வழக்காறுகள் என்னும் இந்நூல் பதிவுச் செய்துள்ளது. மலையாளிப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த முனைவர் ரே. கோவிந்தராஜ் அகத்தாராக இருந்து தன் சொந்த மக்களின் வழக்காறுகளைச் சேகரித்து வெளிப்படுத்தி இருக்கிறார். பழங்குடி வாய்மொழி வழக்காறுகள் என்னும் இந்நூல் வாசிப்பிற்குப் புதியவை. வாசிக்க வாசிக்க ஆர்வம் ஊட்டுபவை. வெயில் நுழை அறியாக் குயில் நிலை பொதும்பரில் இருந்து முதன் முதலாக பொது வெளியில் முகம் காட்டுபவை, தெளிந்த நீரோடை போன்ற வெள்ளத்தியான பண்புகளைக் கொண்டுள்ள மலையாளிகளின் வழக்கங்கள் மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்ளாமல் மலைவாசத்தோடு இயல்பாக உலா வருவதை காணமுடிகிறது.
-முனைவர் ஓ.முத்தையா
Be the first to rate this book.