பழமொழி என்பது பண்டைய மொழி. இது உலகியலைக் கூறும் மொழி. தொல்காப்பியம் இதனை, ’முதுமொழி’ என்று குறிப்பிடுகிறது. இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார். நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி. நாலடிப் பாடல்களின் சொற் பொருள்களைப் பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். பாடல் தொகையைக் கொண்டு, 'பழமொழி நானூறு' என்றும் இது குறிக்கப்பெறும். இந்தப் பாடல்களில் பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம்.
Be the first to rate this book.