கொரோனாமுதல் தகவல் தொழில்நுட்பம் வரை, மாற்றங்களுக்கு தயாரானபள்ளிகள் முதல் சென்னையிலிருந்து வெளியேறிய மக்கள் வரையான அனைத்துமே காலத்திற்கேற்ற கட்டுரைகளாக இந்நூலில் காணக் கிடைக்கின்றன. 2020ஆம் ஆண்டின் வரலாற்றுபதிவாகவும் இந்நூல் விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் சமூக அக்கறையுடன் நேர்மறைஎண்ணங்களை நம்முள் விதைக்கிறது.
தமிழகஅரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற[5] பவித்ராவின் கதைகளில் உயிர்ப்பும், உணர்வுகளும் சுவாரசியம் தருமளவிற்கு கலந்திருப்பது இவருடைய படைப்புகளின் சிறப்புகளாகும். நேர்மறை எண்ணங்களும் சமூக அக்கறையும் கொண்டநடுப்பக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.[6] காதலே உறவுகள் அனைத்துக்குமான அன்புப்பாலம் என்பதை வலியுறுத்தும் கவிதைகள் பல புனைந்துள்ளார். புரியாதகுறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி எளிய சொற்களால் கவிதைபடைத்து இலக்கியச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரதுபடைப்புகள் சிறுகதை,[1] கட்டுரை,[2][3] கவிதை, குறுநாவல் என இவருடைய இலக்கியஉலகம் விரிந்து கிடக்கிறது.[4]
Be the first to rate this book.