'சார் பொதுவா நான் ஏழு இலட்ச ரூபாய் வாங்குவன். இருந்தாலும், அந்தப் பொண்ணு வேற போட்டோவுல ரொம்ப அழகா இருக்கா. சின்ன வயசு வேற. ஒன்னு பண்ணலாம். அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். ஆனா என்கூட மூனு நாள் கொடைக்கானல் வரணும், எனக்கு எப்பெல்லாம் தோனுதோ அப்பெல்லாம் கம்பெனி குடுக்கணும், கேட்டுச் சொல்லுங்க சார்' என்று பேசிவிட்டு வைத்தார். இதையெல்லாம் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மனநிலையே பீதியடைந்து சுற்றிவிட்டது போல் உணர்ந்தேன், அவ்விடத்தில். என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
-நாவலிலிருந்து
Be the first to rate this book.