ஓர் இலக்கியப் பிரதியின் அனைத்து அழகுகளையும் தன்வயப்படுத்திய 'பசி காதல் பித்து' என்னும் முதல் படைப்பில் விளிம்புநிலை வாழ்வில எதிர்கொண்ட பேரனுபவங்களை, சந்தித்த மனிதர்களின் நற்குணங்களை, குணக்கேடுகளைப் புளைவின் வண்ண இழைகளைக் கோர்க்காமல் உயரிய கலைப் படைப்பாக நெய்து காட்டுகிறார்.
பாலசந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்' எழுத்து பாணியை விட்டு விலகி, புனைவை மிஞ்சும் நிஜங்களைப் படைத்திருக்கிறார் அப்பாஸ்.
யதார்த்த வாழ்வு,எளிமை, குடும்ப வாழ்க்கையின் சிடுக்குகள் ஆகியவற்றைக் கச்சிதமும் நேர்த்தியும் வனப்பும் கவித்துவமும் கொண்ட மொழியால் கண்ணீர்த் துளிகளுக்குள் வானவில்லின் மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார் முகம்மது அப்பாஸ், அவரது ஏமாற்றம், துயரம், அவமானம், வடுக்கள் ஆகியவற்றை அச்சுஅசயாக உள்வாங்கி வாசகனுக்கு தமிழில் வழங்குகிறார்.
-கே.வி. ஷைலஜா,
நிர்மால்யா
Be the first to rate this book.