அண்ணா எழுதிய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை 'குமரிக்கோட்டம்', 'பார்வதி பி.ஏ.', 'சங்கோன் ராதா', 'கபோதிபுரக்காதல்', 'குமாஸ்தாவின் பெண்', 'கலிங்கராணி' ஆகியவை. அறிஞர் அண்ணாவின் பார்வதி பி. ஏ., ரங்கோன்ராதா ஆகிய நாவல்கள் சமுதாயச் சீர்திருத்த நாவல்கள் என்ற வரிசையில் சிறப்பிடம் பெறத்தக்கவை. அண்ணாவின் படைப்புகளான பார்வதி பி.ஏ. குமாஸ்தாவின் பெண், இரங்கோன் ராதா, ஓர் இரவு இன்னபிற அவர் எழுதிய தலைசிறந்த படைப்பு இலக்கியங்கள் ஆகும். பார்வதி பி.ஏ என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும் சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவராக அறிஞர் அண்ணா விளங்கினார்.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.