இந்நூலைத் தொகுத்தவர் விதான். இது இவருடைய இரண்டாவது புத்தகம். எந்தவொரு விஷயத்தையும் தோண்டித் துருவி தெளிவு கொள்ளும் இவர் சிறுவயதிலிருந்தே கேள்வி ஞானத்தையும், கற்றல் மூலமாக அறிவையும் தன்னகத்தே வளர்த்துக் கொண்டவர்.
இவரது தந்தை M.R. வெங்கடாஜலபதி. இவர் திருச்சி மாவட்ட இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் ரசிகர் மன்றத் தலைவராவார். தாயார் சரோஜா, தம்பி கிஷோர்குமார், தங்கை லெட்சுமி. தஞ்சாவூரில் பிறந்த இவர் தற்போது திருச்சி உறையூரில் வசித்து வருகிறார்.
தந்தையின் தூண்டுதல் காரணமாக சிறுவயதில் இருந்தே பல்வேறு விதமான புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தையும், திரைப்படத் துறையில் கால்பதிக்கும் எண்ணத்தையும் தனக்குள் வளர்த்துக் கொண்டார். குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது படிப்பைப் பதினோறாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார்.
விதான் தீவிர கிருஷ்ண பக்தர். ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாகவே பகவத் கீதையின் உன்னதத்தையும், அதன் அருமை பெருமைகளையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 'பகவத் கீதை விளக்கக் கதைகள்' என்ற புத்தகத்தை முதலில் எழுதினார். தற்போது இவர் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதிக் கொண்டு வருகிறார்.
Be the first to rate this book.