உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை பலவகையாலும் மக்கள் எல்லோரும் உணருமாறு தம் நாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சி புரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது 'பாண்டியர் வாலாறு' என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு பின்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.
Be the first to rate this book.