இரண்டு கதைகளிலும் வரும் இளைஞர்கள் இருவரும் வெவ்வேறு கதைக்களத்தில் புழங்கும் கதாபாத்திரங்களாயினும், இருவரும் சந்திக்கும் விடயங்கள் வேறுபட்டதாயினும் வாசிக்கும் நமக்கு இருவரையும் தொடர்புபடுத்திப் பார்க்க நிறைய இருக்கிறது. இந்தப் பொருளாதாரத் தேடலில் சமூகம் நமக்கு அளிக்கும் அவநம்பிக்கை, அதிருப்தி நிலை, இயலாமை என ஏராளங்கள் வாழ்வில் தோற்று விட வழி வகுப்பதாகவே இருக்கிறது, இருப்பினும் அதேே சமூகத்திற்குள் இருந்து தான் நாம் மீள வழி ஏற்படுத்தும் கரங்களும் நீளும். எத்தனை முறை விழுந்தாலும் எழச் செய்யும் கரங்கள் அவை. - சு. இளவரசி
Be the first to rate this book.