இந்த நூல் ஒரு நாளில் எழுதப்பட்டதல்ல. அவர் கொண்டிருந்த தரவுகளில் முழுமையாகத் தெளிவு பெறும்வரை சுமார் நாற்பது ஆண்டு காலம் அவற்றுடன் அவர் மல்லுக்கட்டினார். அதனால்தான் அவரது நூல் சகாப்தத்தை உருவாக்கும் ஒருசில நூல்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.
நாகரிகக்கால மக்களின் ஆணாதிக்க சமூகத்தின் தொடக்க கட்டமான ஆதிகால தாய்வழிச் சமூகம் பற்றிய இந்தக் கண்டுபிடிப்பு, டார்வினின் உயிர்களின் பரிணாமக் கோட்பாட்டிற்கும், மார்க்சின் அரசியல் பொருளாதாரத்திற்கான உபரி மதிப்பு கோட்பாட்டிற்கும் உள்ள அதே முக்கியத்துவத்தை மானுடவியலுக்குக் கொண்டுள்ளது.
- ஃபிரடரிக் ஏங்கல்ஸ்
Be the first to rate this book.