பறவைகள், பாலூட்டிகள் இவற்றின் இயற்கை வரலாறு பற்றி சதீஸ் எழுதுகின்றார். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருக்கும் மரபுப் பூர்வமான பிணைப்பைப் பற்றி இந்த கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன.
-தியடோர் பாஸ்கரன்
இந்நூலின் ஆசிரியர் பழனிமலை பல்லுயிர் சூழலை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். பழனிமலைத் தொடர்களுக்கே உரித்தான ஓரிட வாழ்விகளை அறியச்செய்வதோடு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
-கோவை சதாசிவம்
மனிதர்களால் இந்த பூமிக்கு நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேராபத்துகளையும், இதனால் வருங்கால தலைமுறையினர் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால்களையும் முன்னிலைப்படுத்தியே இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
-பா. சதீஸ் முத்து கோபால்
Be the first to rate this book.