பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் போற்றப்படும் புலவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவை உலா. அழகர் கிள்ளை விடு தூது முதலான நூல்களைப் பாடியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது தனிப்பாடல்கள் 25 இடம்பெற்றுள்ளன.
இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் 18-ஆவது நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் சிறந்த கவிஞராக விளங்கியதால் இவருக்குக் கவிச்சக்கரவர்த்தி, கவிராயர் எனப் பாராட்டப்பெற்றவர். இவர் இராச நல்லூரில் பிறந்தவர் என்றும், இராசு மரபினர் என்றும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன. இவரது தனிப்பாடல்கள் 35 இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.