இந்திய வாழ்வியல் சங்கிலியில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு தருணத்திற்கும் ஒரு சுவை உண்டு. அந்தத் தொன்மையைப் பறைசாற்றும் வகையில், 100க்கும் மேற்பட்ட அபூர்வமான பாலக்காட்டு உணவுச் செய்முறைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
ஆலயங்களின் புனிதமான பிரசாதங்கள். அன்றாடச் சமையல், அமாவாசை & சிராத்தக் காலங்களுக்கான ஆசாரம் மாறாத சமையல், பிரசவத்திற்குப் பிந்தைய பத்தியச் சமையல், உடலைத் தேற்றும் உணவுகள். பாலக்காட்டு ஸ்பெஷல் கூட்டுகள். குழம்புகள் மற்றும் துவையல்கள் எனப் பல வகையான உணவுகளைச் செய்யும் முறைகள் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
நம் வீட்டுப் பெரியவர்கள் அருகில் இருந்து சொல்லித் தருவது போன்ற உணர்வைத் தரும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இது சமையல் குறிப்புகளின் தொகுப்பு மட்டுமல்ல; தலைமுறைகளைத் தாண்டிக் கடத்தப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்.
Be the first to rate this book.