இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அவர் அனுமதி தேவையா? என்ற கேள்வி பாடகர் எஸ்பீபி இசை நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பின் பொதுத்தளத்தில் கூடுதல் கவனம் பெற்றது. அப்போது "இளையராஜா ராயல்டி கேட்பது சரியா?" என்ற கேள்வி அதிகம் கேட்கப்பட்டது.
இளையராஜாவின் உரிமை குறித்த செய்திகள், ஊடக விவாதங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போதும், நண்பர்கள் அவை குறித்துக் கேள்விகள் கேட்கும்போதும், அதனை விளக்க வேண்டும் என்று எண்ணம் எழும். ஆனால், ஒரு உரையாடலின் போதோ, சிறு விவாதம் ஒன்றிலோ, அதை முழுமையாகச் சொல்லிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.ஒரு நாள் நண்பர் அஜயன் பாலாவுடன் நடந்த ஒரு பத்து நிமிடத் தொலைபேசி உரையாடலின்போது இந்தப் புத்தகம் எழுதும் திட்டம் உருவானது.
Be the first to rate this book.