ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த இருவரின் கதையை இந்த நாவல்கூறுகிறது. கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். இருவரும் பாவங்கள் செய்தவர்கள்தாம்; அவர்களுக்கு ரகசியங்கள் உள்ளன. இருவரும் சந்தித்த நாளில் அவனது அதிர்ஷ்டத்தைப் ‘புத்தகத்திலிருந்து’ அவள் அவனிடம் சொல்கிறாள். தனது தாய்நாட்டின் கதைகளை அவன் அவளிடம் கூறுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒன்றும், எப்போதோ வெளியேறி வந்துவிட்ட தாய்மண்ணில் மற்றதுமாய் இரு தளங்களில் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது.
Be the first to rate this book.