பயணங்கள், கடல், முகமறியா மனிதர்கள், எப்பொழுதும் எனக்காகவே காத்துக்கிடக்கும் அந்த மலை உச்சி போன்று எல்லாவற்றையுமே இந்த இயற்கை எனக்காகவே விட்டுவிடுகிறது. பதிலுக்கு பிரியமான மனிதர்களை மட்டும் எடுத்துக்கொண்டு நினைவுகளை இந்த எல்லாவற்றோடும் தேட வைக்கிறது. அப்படியாக தற்கொலை எண்ணங்களை ஒரு கவிதை மாற்றுமா, இந்த இயற்கை நம்மோடு பேசுமா என்றால் நிச்சயம் பேசும். கழுத்தில் சுருக்கு கயிறு நெருக்கிக்கொண்டிருக்கும் பொழுதும் கூட ஒரு பட்டாம்பூச்சி சுருக்கு கயிற்றின் நுணியில் உங்கள் கழுத்தை நெருக்காமல் தடுக்கச்செய்யலாம். தனிமையில் நிறைய மரணங்களை பற்றிய தேடலின் பொழுதும், எனக்குள்ளாக சூழ்ந்துக்கொண்டும் என்னைக்கட்டிக்கொண்டும் இருந்த வெறுமையையும்,மரண எண்ணங்களையும் ஏதோ ஒரு சூழல் மாற்றியுள்ளது. அதில் இந்த கவிதைகள் நிறையவே நிறைந்துள்ளது
Be the first to rate this book.