நிறைவைத் தந்தது!
ராஜம் கிருஷ்ணனின் நெடுங்கதை நிறைவைத் தந்தது. உலக நாடுகளில் கம்யூனிசம் ஒரு கேள்விக்குறியாகி வரும் இந் நேரத்தில் ஆசிரியை அந்தக் கொள்கையை எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று சந்தேகப்பட்டேன். கூறவேண்டியதைத்தான் கூறியிருக்கிறார், 40 ஆண்டுகளுக்கு முந்தைய குடும்பம், அரசியல் பற்றிய யதார்த்த நிலையை ஆசிரியை கண் முன் கொண்டு வந்திருந்தார். ஆசிரியைக்கு நன்றி
-சி.மூர்த்தி
கொடுவாய்
ஒரு மைல் கல்!
ராஜம் கிருஷ்ணனின் பாதையில் பதிந்த அடிகள என்ற நிஜ வாழ்க்கைத் தொடரைப் படித்து வந்தேன். சற்றும் மிகைப்படுத்தாமல் இக் காவியத்தைப் படைத்த ராஜம் கிருஷ்ணனுக்கு இக் கதை ஒரு மைல் கல்.
-எம்.சந்திரசேர்
மேட்டு மகாதானபுரம்
தமிழிலக்கியத்திற்குப் பெருமை!
மணலூர் மணியம்மாளின் தீரத்தை, போராட்டத்தை சாகசத்தை, தியாகத்தை மக்கள் அறியாது மண்ணோடு மண்ணாகப் புதைந்து போல இருந்ததை வரலாறாக்கி சரித்திரம் படைத்திருக்கும் ராஜன் கிருஷ்ணனின் பணி தமிழிலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கும்
-தாரகை
பெங்களூரு-13
வரலாற்றுப் பொக்கிஷம்
பாதையில் பதிந்த அடிகள், தொடர் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் வரலாற்றுப் பொக்கிஷம்.
-ஜே.ஹெச் எம் பத்மநாபன்
கோவை
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.