"1913-ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களுக்குப் பிராமணர்கள் 93 இடங்கட்கும். பிராமணரல்லாதார் 25 இடங்கட்கும். இந்திய கிறிஸ்துவர். ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் எஞ்சிய இடங்கட்கும் நியமிக்கப்பட்டனர்... இந்தியாவில் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வு என்பது பெரும்பாலும், முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு இருந்தது என்றும், பிராமணரல்லாதார்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது வெளிப்படையாகின்றது... இது தவிர அதிகாரிகள் தங்கள் மனம்போல் நியமிக்கும் கீழ்நிலை உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால் அங்கும் பிராமணர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரியவரும்.
அறிவுத் துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில், தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமாக உரிமையாக்கிக் கொண்டு பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக் கூட இடங்கொடுக்காமல் இருந்து வருவதேயாகும்.
விழிப்படைந்த பிராமணரல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கின்றது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப் பெரிது. அத்துடன் மிக அவசரமானதுமாகும்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.