அடிக்கடி அளவுக்கதிகமாகச் சிந்தித்துக் கொண்டும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிக் கொண்டும், சுய அழிவுச் சுழற்சியில் மாட்டிக் கொண்டும் இருக்கின்ற நபர்கள் அவற்றிலிருந்து வெற்றிகரமாக விடுபடுவதற்கு உதவுகின்ற ஓர் அருமையான கையேடு இந்நூல். சிறிய விஷயங்கள் எப்படி உங்களுடைய முழு நாளையும் சூறையாடிவிடுகின்றன என்பதை நேர்மையாகவும் நடைமுறை ஞானத்துடனும் விளக்குகின்ற டேனியல் சிடியாக், அத்துடன் நின்றுவிடாமல், அவற்றிலிருந்து முழுச் சுதந்திரம் பெறுவதற்கான நிரூபணமான வழிமுறைகளையும் இதில் எடுத்துரைக்கிறார். கீழ்க்கண்டவற்றை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்: • சில குறிப்பிட்டச் சூழல்களில் அதீத சிந்தனை என்ற சுழற்சிக்குள் நீங்கள் மாட்டிக் கொள்வதை நிறுத்துவது எப்படி • குற்றவுணர்ச்சியின்றி எல்லைகளை வகுத்துக் கொள்வதும், சரியான நேரத்தில் விலகிச் செல்வதும் எப்படி • நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பிறருடைய நடவடிக்கைகள் அல்லது உணர்ச்சிகள் கட்டுப்படுத்துவதைத் தடுப்பது எப்படி • உங்களுடைய ஆற்றலை உறிஞ்சுகின்ற விதத்தில் உங்களைப் பிறர் வளைக்க அனுமதிக்காதிருப்பது எப்படி • எதுவும் உங்களை அசைக்காதிருக்கின்ற விதத்தில் உங்களுக்குள் மன வலிமையைக் கட்டமைத்துக் கொள்வது எப்படி.
Be the first to rate this book.