கம்பம் பள்ளத்தாக்கில் பிறந்து வளர்ந்த மு.செந்தில்குமார் என்ற கம்பம் புதியவன் எதிர்கொண்ட கிராமத்துத் தெருக்கள், நிலம், மனிதர்கள், கோவில், விவசாயம் தொடர்பான பரந்துபட்ட அனுபவங்கள் புனைகதைகளாகியுள்ளன. எல்லாம் கதைகளாக மாற்றமடைகின்ற சூழலில் கிராமத்து மனிதர்கள், வாசிப்பில் நிழல்களாக உருமாறியுள்ளனர். பிரதியில் இருந்து வெளியேறிய கதைமாந்தர்கள், நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்கின்றவர்களாக மாறுகின்றனர். ஒருவிதமான முரட்டுத்தனமும் துணிச்சலும் தோய்ந்து வாழ்கின்ற கம்பம் வட்டாரத்தினர் சிறிய விஷயத்துக்குக்கூட உணர்ச்சிவயப்பட்டு எடுக்கின்ற முடிவுகளும் விளைவுகளும் மண்ணின் கவிச்சியுடன் கதைகளாகியுள்ளன. 'ஒத்த வீடு' சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கம்பம் புதியவன் எழுதியுள்ள இனவரைவியல் கதைகளை ஒருசேர வாசிக்கும்போது இப்படியெல்லாம் இங்கே மனித வாழ்க்கை இருக்கிறது என்று கண்டறிந்திட முடியும்.
Be the first to rate this book.