தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் தொட்ட அம்சங்களை நர்சிம்மும் இக்கதைகளில் தொட்டிருக்கிறார். ஆனால், எழுதிச் செல்லும் மொழி மட்டும் சுவாரஸ்யமான வெகுஜன மொழி. இந்தக் கதைகள் எதுவும் அந்நியப்பட்டு நிற்கவில்லை. வாசகன், தன்னை ஏதேனும் ஒரு வகையில் கண்டடைவதற்கான சாத்தியம் இவற்றில் இருக்கவே செய்கிறது.
பத்ரகாளியின் தொங்கும் வெளிநாக்கைப் போல, புறவயமான விஷயங்கள் கதையில் நேரடியாக வெளிப்பட்டாலும் ஆழ்மன அல்லது ஆண் மன உண்மைகள் தொண்டைக்குள்ளிருக்கும் உள்நாக்கைப்போல மறைந்திருப்பதை வாசகன், மருத்துவனின் பார்வைகொண்டு முடியும்.
பார்த்துவிட எனக்குத் தெரிந்தவரை தமிழில் வந்திருக்கும் முதல் 'ஆண் மையத் தொகுப்பாக' இதனைச் சொல்லலாம்.
-எழுத்தாளர் அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.