தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண்ட இலக்கியம், ஓவியம், திரைப்படம், தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது.
****
ஜூமானா ஹத்தாத் லெபனான் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிளொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புகளின் தொகுதியோன்றும் ஜூமானாவின் முக்கியமான அரபு மொழி நூல்கள்.
Be the first to rate this book.