இது பெண் எழுதும் காலம்!
பெண்ணெழுத்தின் வெளி என்பது இப்போது மேலும் விரிந்துபட்டிருக்கிறது. தமக்கு நேர்ந்த துயரங்களை – வலிகளை எழுத்து வழியாக இறக்கி வைக்க முன் வந்திருக்கிறார்கள் பெண்கள். அந்த வரிசையில் ஜூலியஸ் அவர்கள் தன் இளம்பிராயத்தில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், அவரது பெற்றோர் சந்தித்த சாதித் தீண்டாமை ஒடுக்குமுறைகளையும் தமது நேரடி அனுபவ சாட்சியமாகக் கொண்டு ‘ஊருக்கு ஒரு குடி’ என்ற இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தில் தொடரும் சாதித் தீண்டாமை அழுக்கை இவர் எழுத்தின் வழி அடித்து வெளுத்திருப்பதில் நம் மனதில் எஞ்சி நிற்கும் கறைகளும் கழுவிக் களையப்படுகின்றன.
– கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.