நகர்மயமாதலுக்காகவும், வெவ்வேறு வேலை - தொழில் வாய்ப்புகளுக்காகவும், திருமண உறவுகளின் காரணமாகவும் சொந்த ஊரைவிட்டு எங்கோ இடம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும் பலருக்கும் மனதில் பதிந்திருக்கிறது சொந்த ஊர். ஊர் என்றதும் அங்குள்ள உறவுகள், நட்பு பாராட்டிய முகங்கள், தெருக்கள், வீடுகள், ஆறு, குளங்கள், கோவில்கள், திருவிழாக்கள், குதூகலங்கள் என்று எல்லாமே சேர்ந்த கலவைதான் சொந்த ஊரின் மீதான அன்பைக் கூட்டுகிறது.
சொந்த மண், அதிலிருக்கும் மனித முகங்கள், அவர்களின் சந்தோஷங்கள், துக்கங்கள், முரட்டுக் கோபங்கள், வாஞ்சையான பேச்சுகள், சில பிடிவாதங்கள், நம்பிக்கைகள், எளிய மதிப்பீடுகள், இவற்றை யாரும் சுலபமாக உதறிவிட முடியாது என்பதற்கான பதிவு, இந்த ‘ஊர்மணம்’ தொகுப்பு.
தமிழகத்தில் சில நகரங்கள் மட்டுமல்லாமல் கடல் கடந்து வாழும் தமிழர்களின் வசிப்பிடங்களைப் பற்றிய பதிவுகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் இவர்களுடைய அடையாளம் மட்டுமல்ல, நம்முடைய அடையாளங்களும் சாயல்களும்கூடப் புகைமூட்டமாய்த் தெரியும். இது முழுமையானதல்ல. முழுமைக்கான முயற்சி, அவ்வளவுதான்.
Be the first to rate this book.