கரிசல் காட்டின் இன்றைய கோலத்தைப் படம் பிடிக்கும் கதைகளே இவை. பெரும்பாலும் தண்ணி இல்லாத கரிசக்காட்டில் விவசாயம் செய்து பிழைக்கும் மக்களின் அவல வாழ்வே இக்கதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது. ஆகவே இயல்பாக இக்கதைகள் கரிசல்காட்டுப் பெரியவர்களின் மன உலகைச் சுற்றியே வருகின்றன. இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்குப் போய்விட்ட பின்னணியில் விவசாயம் இன்று படிக்காத இளைஞர்கள் மற்றும் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிரச்சினை என்றாகிவிட்ட யதார்த்தத்தை இக்கதைகள் எல்லாமே அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
-ச. தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.