சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவரான பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இப்பொழுது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளைத் தம்முடைய எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழகமெங்கும் இடையறாமல் பரப்புரை செய்து வருகிறார்.
சமூக நீதி, அரசியல், இலக்கியம் தொடர்பான அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள சுபவீ, சமூக அரசியல் காரணங்களுக்காக ஒன்றரை ஆண்டுக் காலம் 'பொடா' சிறை உட்பட எட்டு முறை சிறை சென்றுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
Be the first to rate this book.