ஓ ஹென்றியின் கதைகளில் அவருடைய வாழ்க்கையில் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் நிரம்பியிருக்கின்றன. செவ்விந்தியர்களோ, கருப்பின மக்களோ அல்லது ஷாப்கேர்ள் போன்ற சாதாரண வர்க்கத்தினரோ, அவர் கதைகளில் வரும் மனிதர்கள் எவராயினும் அவர் வாழ்வின் கணப்பொழுதையேனும் இடறிச்சென்றவர்கள் என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவின் தெற்கு, மேற்கு, வடக்கு என எந்தப் பகுதியையும் அவர் தவறவிடவில்லை. அதே சமயம் இது சரி, இது தவறு என விமர்சிக்கவும் இல்லை.
"இங்கிலாந்துக்கு ஒரு டிக்சன், பிரான்சுக்கு ஒரு ஹியூகோ, அமெரிக்காவுக்கு ஒரு ஓ ஹென்றி" என்று புகழப்பட்ட உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்.
Be the first to rate this book.