இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய இலக்கிய வரலாறு, இஸ்லாமிய ஆன்மிக வரலாறு, நபித்தோழர்கள் தொடர் பான வரலாற்று நிகழ்வுகள், இஸ்லாமிய நடைமுறைகள், இஸ்லாமியப் பண்பாடு, ரமலானின் முக்கியத்துவம், திருமறை, ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள், சூஃபித்துவத்தின் வெளிப்பாடுகள், அதன் நுட்பங்கள், தந்தை மகள், பாட்டியார் என குடும்பத்தில் நிலவும் அன்பு இப்படிப் பல விஷயங்களை கவிதையாக்கி யிருக்கிறார் நிஷா மன்சூர்.
கவிதைகளினூடே ஆங்காங்கு குணங்குடி மஸ்தான் சாஹிபின் பாடல்களும் குறிப்பிடப்படுகின்றன. ஒரு நல்ல முஸ்லிமை, ஒரு நல்ல கவிஞனை, ஒரு ஆழமான படிப்பாளியை நாம் தெரிந்துகொள்ள இந்தக் கவிதைத் தொகுதி நிச்சயம் உதவும்.
இதை ஒரு சாதாரணமான கவிதைத்தொகுதி என்று சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லவும் கூடாது. இஸ்லாமிய வரலாற்றை நன்கு அறிந்த ஒரு படைப்பாளியின் ஆன்மிக வெளிப்பாடு என்று வேண்டுமானால் இதைச்சொல்லலாம்.
-நாகூர் ரூமி
Be the first to rate this book.